தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப்-1 முதன்மை தேர்வு தமிழ் வழியில் எழுதும் பெண் தேர்வர்களுக்கு மட்டும் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் வருகின்ற மே 17ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி அறிவித்துள்ளது. மே 17ஆம் தேதி முதல் மூன்று மாதங்கள் தொடர்ந்து முழு நேரமாக நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பானது டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் நடராஜ் நேரடி கட்டுப்பாட்டில் நடைபெறும்.

முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று, இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தட்டச்சு செய்து 9710375604 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய ஆட்சி தமிழ் ஐஏஎஸ் அகாடமி 142 ஜிடிஎஸ் சாலை குரோம்பேட்டை சென்னை 44 என்ற முகவரியில் நேரில் சென்று அல்லது 7550151584, 9710375604 ஆகிய கைப்பேசி எண்களில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.