எத்தனால் விலை அதிகரிப்பு காரணமாக டாஸ்மாக்கில் குறைந்த விலை மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 140 ரூபாய் வகை மதுபானம் கையிருப்பு இல்லாததால் 160 ரூபாய், 180 மற்றும் 240 ரூபாய் விலை கொண்ட மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

டாஸ்மாக் 40 சதவீதம் விற்பனைக்கு குறைந்த விலை மதுபானங்களை காரணமாக இருந்த நிலையில் குறைந்த விலை மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் அவதி அடைந்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகம் வைத்து விற்கும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.