தமிழகத்தில் ஒரு கோடி மகளிர் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெற உள்ளார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது.

இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறையுடன் முடிவெடுத்துள்ளனர். வருகின்ற செப்டம்பர் முதல் ஒரு கோடி மகளிர் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை பெற உள்ளனர். இலவச மின்சாரம் மற்றும் காலை சிற்றுண்டி உள்ளிட்ட திட்டங்களுக்கு மக்களுக்கு இந்த அரசு வழங்கியுள்ளது என்ற முதல்வர் ஸ்டாலின் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.