தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை ஆறு பேர் மழை காரணமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்கப்படும். மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக இருக்கிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.