தமிழகத்தில் நேற்று முன் தினம் ஒரே நாளில் 400 கோடிக்கு மது விற்கப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறுவதால் நேற்று முன்தினம் ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஏப்ரல் இருபதாம் தேதி காலை 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் வழக்கத்தை விட நேற்று முன் தினம் 2.5 மடங்கு அதிகம் விற்பனையானதாக தகவல் தெரிவிக்கின்றன.