தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 இன் படி சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் 25 சதவீதம் இடங்களில் சேர 2003 ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 8,000 க்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தற்போது 2023-24 ஆம் கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளிகளிலும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகளை ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இருப்பதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மாணவர்கள் சேர ஜாதி சான்றிதழ்,இருப்பிட சான்றிதழ் மற்றும் வருமானவரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றோர்கள் முன்னதாக தயாராக வைத்திருக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.