தமிழகத்தில் எழுத படிக்க தெரியாத பள்ளி மாணவர்களுக்கு மூன்று மாத காலம் சிறப்பு பயிற்சி வழங்குவதற்கு பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அவர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பலர் எழுத படிக்க தெரியாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போட்டி தேர்வுகளுக்கான பயிற்சியை இப்போதே தொடங்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் எழுத படிக்கத் தெரியாத மாணவர்களுக்கு மூன்று மாத சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.