தமிழ்நாடு பொது சுகாதார பணியில் சேர்க்கப்பட்டுள்ள சுகாதார அலுவலர் பணிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கணினி வழி தேர்வுகள் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேலைகளில் நடந்து முடிந்தது.

இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் oral test நடத்தப்பட்டு தற்போது சுகாதார அலுவலர் பணிக்கு ஆள்சேர்ப்பு மூலம் நியமனம் செய்வதற்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவு எண்ணிக்கை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சியில் www.tnpcs.gov.in என்ற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது