நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் வெளிமாநிலத்தவர்கள் குறிப்பாக வட மாநிலத்தவர்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டப்படி நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை பின்பற்றப்படுகிறது. அதன்படி நாட்டில் எந்த மாநிலத்தின் ரேஷன் அட்டை வைத்திருந்தாலும் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என அவர் அறிவித்துள்ளார்.