தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று செப்டம்பர் 13ஆம் தேதி ஒன்பது மின்சார ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மூர் மார்க்கெட் முதல் அரக்கோணம் செல்லும் மின்சார ரயில், மூர் மார்க்கெட் முதல் திருத்தணி செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அரக்கோணம் முதல் மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரயில், திருத்தணி முதல் மூர் மார்க்கெட் செல்லும் மின்சார ரயில், மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி செல்லும் மின்சார ரயில் சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே இன்று மூர் மார்க்கெட்டில் இருந்து வெளியூர் செல்ல திட்டமிட்டு இருக்கும் பயணிகள் மாற்றுப் பயணம் ஏற்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் நாளை முதல் அனைத்து ரயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.