தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது மதுரையில் செப்டம்பர் 9ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையம் சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ எம் ஜி யாதவா மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள வேலை தேடுவோர் கட்டாயம் தங்களுடைய சுய ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் காலை 8 மணி முதல் 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9ஆம் தேதி கன்னியாகுமரி நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு பயனளிக்கும் விதமாக வேட்டூர்ணிமடம், எம் எஸ் ரோடு, முன்னோடி குமாரசாமி கல்லூரியில் தனியார் துறைகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் எட்டாம் வகுப்பு முதல் முதல் நிலை படிப்பு வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம்.