தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் 9ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்கலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள்  www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நேரில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனைப் போலவே திருப்பூர், தென்காசி , மயிலாடுதுறை ஆகிய  மாவட்டத்திலும் டிசம்பர் ஒன்பதாம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது