தமிழகத்தில் பருவ மழைக்காலம் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வருகிறது. அதோடு இன்புளுயன்சா காய்ச்சலும் பரவ தொடங்கி இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக நவம்பர் 25ஆம் தேதி இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இலவச மருத்துவ முகாம்களை தமிழக அரசு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் மருத்துவ முகாம்களில் மக்கள் அனைவரும் பங்கேற்ற பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.