தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருந்தது. அதனைப் போலவே 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் அனைத்து பள்ளிகளிலும் ஒரே வினாத்தாள் முறை செயல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 11 நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மாணவர்களின் பாடப் புத்தகங்கள் சேதமடைந்துள்ள நிலையில் இன்று தேர்வுக்கு தயாராக மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் டிசம்பர் 13ஆம் தேதி முதல் தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.