தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்தார். அதனால் இன்று தமிழக முழுவதும் வழக்கம் போல பள்ளிகள் செயல்படும்.