தஞ்சை மாவட்டத்தில் இன்று (அக்.06) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர்  ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு அவர் பயணம் செய்யும் சாலைகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.