தஞ்சை மாவட்டத்தில் இன்று (அக்.06) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி திருச்சி மாவட்டத்தில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு அவர் பயணம் செய்யும் சாலைகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை….!!
Related Posts
14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை,…
Read moreதமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read more