தமிழகத்தில் வழக்கமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் மழை மற்றும் பண்டிகை காரணமாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தால் அதனை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பார். அதனைப் போலவே ஏதாவது சிறப்பு நிகழ்வு மற்றும் தலைவர்களின் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடத்துவதற்காக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்.

அதன்படி கடந்த மாதம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை பள்ளிகள் இயங்கிய நிலையில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த வாரமும் சனிக்கிழமையான இன்று திருவாரூரில் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.