தமிழகத்தில் வார இறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூலை 15 மற்றும் 16 உள்ளிட்ட வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்வதால் அவர்களின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் கோவை, மதுரை, திருநெல்வேலி,திருச்சி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதனைப் போலவே ஜூலை 16ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து பயணிகள் திரும்ப வசதியாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது