நடிகர் விஜய் தந்து மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன முடிவெடுக்கப்பட்டது என பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய வி.ம.இ நிர்வாகி புஸ்ஸி ஆனந்த், ‘நிர்வாகிகளிடம் அவரவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ள விஜய் அறிவுறுத்தினார். மேலும் விஜய மக்கள் இயக்கம் சார்பில் விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்கப்படவுள்ள இரவு நேர பாடசாலை இன்று  செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலைக்கு தளபதி விஜய் பயிலகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்த பாடசாலையை தொடங்கி வைக்கிறார். பெருந்தலைவர் காமராஜரை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளில் இந்த பயிலகம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.