தமிழகத்தில் இன்றும் நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம வெளியிட்டுள்ளது. இதோ,

மதுரை:

ஆரப்பாளையம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, ஏ.ஏ. மெயின் ரோடு, மேலபொன்னகரம் 2 – 8வது தெரு, ஹார்வி நகர் 1 – 4 தெரு, ஞானஒளிவுபுரம், விசுவாசபுரி 1 – 5 தெரு, ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், ஆரப்பாளையம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கைலாசபுரம், அசோக் நகர், அருள்தாஸ்புரம், களத்துபொட்டல், பெரியசாமி கோனார் தெரு, தத்தனேரி மெயின் ரோடு முதல் மைதானம் வரை, பாரதிநகர், கணேசபுரம், பாக்கியநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. அதே போல், பெருங்குடி ஆர்.எம்.எஸ் காலனி, புதுக்குளம் 2 பிட், ஜென்னட் நகர், அவனியாபுரம் மெயின் ரோடு, முத்துப்பட்டி, பெருமாள் நகர், கோல்டன் சிட்டி, இந்தியன் நகர், சிவகாமியம்மன் நகர், பைக்காரா, அழகுசுந்தரம் நகர், பாலநாகம்மாள் கோவில் தெரு, மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி:

மீனாட்சிபுரம் மின்வாரிய பிரிவிற்குட்பட்ட உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிகுளம் சந்திப்பு, ராமன்புதூர் சந்திப்பு, வெள்ளாடிச்சிவிளை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

புதுச்சேரி:

காரைக்காலில் உயர் மின் அழுத்த பாதையில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி மின் பிரிவிற்கு உட்பட்ட கீழகாசாக்குடி மேடு மற்றும் விநாயக மிஷன் மெடிக்கல் காலேஜ் ஆகிய அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் இருக்காது.

திருவள்ளூர்:

போரூரில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக, போரூர்- டெம்பிள் வேவ் அமர்பிரகாஷ், குமரன் நகர், பி.கே.வி.மகா நகர், ஆர்.பி.தர்மலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. அம்பத்தூர்- ஜெ.ஜெ.நகர் 10, 11, 12-வது பிளாக் முகப்பேறு கிழக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

தஞ்சாவூர்:

நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பரம்பயம், கொத்தங்குடி, வாளாபுரம், மேலாத்து குறிச்சி, நீலத்தநல்லூர், இணை பிரியாள் வட்டம், காவர்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாச்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திரு வைகாவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், சுவாமிமலை, திம்மக்குடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூர், மருத்துவக்குடி, நாகக்குடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏறாகரம், கொட்டையூர், ஜாமியா நகர், முப்ப கோயில், வளையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தர பெருமாள் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

திருப்பூர்:

நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அலகுமலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பொல்லிகாளிபாளையம், முத்தணம்பாளையம், அலகுமலை, பெருந்தொழுவு நாச்சிப்பாளையம், கைகாட்டி, தொங்குட்டிபாளையம், கண்டியன் கோவில், மீனாட்சி வலசு, மருதுரையான்வலசு, முதியொநரிச்சல், மணியாம்பாளையம், கந்தாம்பாளையம், கரியாம்பாளையம், ஆண்டிபாளையம், சென்னிமலைபாளையம் பிரிவு, காளிபாளையம், விஜயாபுரம், திருநகர், யாசின்பாபுநகர், காங்கயம்பாளையம், குப்பாண்டம்பாளையம், வசிவரம்புதூர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

தர்மபுரி:

நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கீழ்மொரப்பூர், பறையப்பட்டிபுதூர், வேட்ரப்பட்டி, கணபதிபட்டி, கோட்டப்பட்டி, சிட்டிலிங், வேலனூர், அம்மாபேட்டை, தீர்த்தமலை, கீழானூர், செல்லம்பட்டி, சிக்களூர், நரிப்பள்ளி மற்றும் அதனை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

ராணிப்பேட்டை:

நாளை செவ்வாய்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆரூர், வடக்குமேடு, தட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.