தமிழகத்தில் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக வெளியூர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை மற்றும் வார விடுமுறைகளுக்கு மக்கள் அதிக அளவில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதைகருத்தில் கொண்டு இன்று சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட தமிழக முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொந்த ஊரிலிருந்து திரும்ப ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்து இயக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது