தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு.  இந்நிலையில் இன்று  (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு தினங்களும் தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படாது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை பெறுவதற்காக ஜூலை 30ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 26ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் இனி திங்கட்கிழமைதான் நீங்கள் ரேஷனில் பொருள் வாங்க முடியும்.