சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பருவமழை காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு குறிப்பிட்ட சில நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக ஒவ்வொரு சனிக்கிழமைகள் தோறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.

அதன்படி கனமழை காரணமாக அழிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை பாடத்திட்டத்தின் படி வகுப்புகள் என்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் வியாழக்கிழமை தேதி அட்டவணைப்படி பள்ளிகள் இன்று செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது