தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் என்பதால் இந்த ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் இரண்டாம் தேதி முதல் ஜூன் மூன்றாம் தேதி காலை வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வருவார்கள். இதனால் ஜூன் இரண்டாம் தேதி முழுவதும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வைகாசி விசாக விழாவை முன்னிட்டு  ஜூன் இரண்டாம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் விதமாக வருகின்ற ஜூன் 10ஆம் தேதி பள்ளி,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.