தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே சமயம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளும் நடைபெற்ற வருகின்றன. அந்த மாணவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு காரணமாக மார்ச் 25ஆம் தேதி அன்று சென்னை மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் உள்ள அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்புகள் செவ்வாய்க்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி முழு வேலை நாளாக இன்று இயங்கும். அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வுக்காக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அனைத்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சிற்றறிக்கை அனுப்பியுள்ளார்.