தமிழகத்தில் பேருந்து பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் தாழ்தள பேருந்து இயக்கத்தின் சோதனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இம்மாதம் (ஏப்ரல்) இறுதிக்குள் இந்த வகைப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிகிறது.