தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னையில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 8050 பதற்றமானதாகவும், 181 மிக பதற்றமானதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. இதுவரை 13 லட்சம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கப்பட்டு விட்டது. புதிய தொழில்நுட்பத்தில் உள்ள மார்க் 3 வாக்குப்பதிவு இயந்திரம் இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்