தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், கோவில் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கந்தூரி திருவிழாவை முன்னிட்டு நாளை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் நடைபெற இருப்பதால், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது