தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாகவும் அதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஓர் ஆண்டு சான்றிதழ் படிப்புக்கு உணவு மற்றும் தங்கும் இடத்துடன் மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு 14 முதல் 24க்குள் இருக்க வேண்டும். இந்துவாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.