தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெய்த அதி கன மழையால் மூன்று நாட்களாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு டிசம்பர் 22ஆம் தேதி உடன் முடிய விருந்த நிலையில் 3 நாட்கள் கூடுதலாக தேர்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரையாண்டு விடுமுறை முடிந்து நெல்லை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜனவரி 2ஆம் தேதிக்கு பதில் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.