நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 27 பயணிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தது. அதிவேகத்தில் வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து இழந்து தடுப்பில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுநர், உதவியாளர் மற்றும் பேருந்தில் பயணம் செய்த 27 பேர் என 29 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.