தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் மழை பெய்யும். குமரிக்கடல் பகுதியில் மழைக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது