தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே மக்களை சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதே சமயம் வருகின்ற ஏழாம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் , தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.