தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

இந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு சார்பில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அன்றைய தினம் நடன நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றம், நாடகம் மற்றும் கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்பட உள்ள நிலையில் மாணவ மாணவிகளும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.