தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று மேலாண்மை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ் கே ஹெல்தர் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு சாதகமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.