தமிழகத்தின் பிரபல இதழ்களில் ஓவியம் வரைந்த ஓவியர் மாருதி (86) மாரடைப்பால் உயிரிழந்தார். 20.04.1959ஆம் ஆண்டு வெளியான குமுதம் வார இதழில் மாருதி தனது முதல் ஓவியத்தை வரைந்தார். அதன்பின் குமுதம், விகடன், கல்கி என பல இதழ்களில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியங்கள் வரைந்து தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். அவருடைய மறைவு மூத்த தலைமுறையினரை கவலையுற செய்துள்ளது.