சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரைத் திறந்து, மர்ம நபர்கள் உள்ளே இருந்த பர்ஸை திருடிக்கொண்டு ஓட முயன்றபோது, காரின் உரிமையாளர் காட்டிய துணிச்சல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பைக்கில் வந்த திருடர்கள் மின்னல் வேகத்தில் பர்ஸை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர், ஆனால் உரிமையாளர் சற்றும் யோசிக்காமல் அவர்களைத் துரத்திச் சென்று தாக்கி, தனது பர்ஸை மீட்டுக் கொண்டார்.

“>

 

இந்த அதிரடியான மோதல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருடர்களைக் கண்டு அஞ்சாமல் தனி ஆளாகப் போராடிய அந்த நபரின் தைரியத்தை இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.