நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 2024-25ஆம் கல்வியாண்டின், தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நாளை (ஏப்ரல் 22) முதல் தொடங்கி அடுத்த மாதம் மே 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை, rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் பதிவு முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்கள் பெற்றோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகிறது. பள்ளிகளில் நிர்ணயிக்கப் பட்டதைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் பள்ளிகள் ஒதுக்கப்படுகிறது.