தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி “உப்பென்னா’ திரைப்படம் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தார். இப்போது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி படத்தில் நாகசைதன்யாவிற்கு ஜோடியாக நடித்து உள்ளார் கீர்த்தி ஷெட்டி.

இந்த நிலையில் தற்போது பல சினிமா வாய்ப்புகள் இவருடைய வீட்டு கதவை தட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் இவருடைய ரசிகர் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கிடையில் வருங்கால கணவர் குறித்து வாய் திறந்த கீர்த்தி மனம்  திறந்து பேசியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.  தனது வருங்கால கணவர் குறித்து கஸ்டடி பட விளம்பர நிகழ்வில் பேசிய அவர், எனது வருங்கால கணவர் அழகாக இருக்க தேவையில்லை. பெரிய செல்வந்தராக இருக்க வேண்டும் என்றில்லை. பாசாங்கு இல்லாமல், நேர்மையான நல்ல மனம் கொண்டவராக இருந்தாலே போதும். எந்த வயதிலும் வளர்ச்சியை நோக்கிய மனப்பான்மையுடன் கொஞ்சம் குண்டாகவும் இருந்தால் பிடிக்கும் என கூறியுள்ளார்.