விமானத்தில் பிச்சையெடுத்த நபரை பெங்களூரு காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். சென்னைக்கு செல்வதற்காக  விமானத்தில் விக்னேஷ் என்பவர் ஏறியுள்ளார். இதனையடுத்து அவர் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லை என்று சக பயணிகளிடம் கூறியுள்ளார். பின்னர் சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்றும் பயணிகளிடம் தனக்கு பணம் கொடுத்து உதவுமாறு பிச்சை கேட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பயணிகள் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த  புகாரின்பேரில் காவல்துறையினர்  விக்னேஷை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், விக்னேஷிடம் 26 கிரெடிட் கார்டுகள் இருப்பது தெரியவந்தது.