கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவில் என்ஜினீயரரான அர்ஜுன். இவர் ஆம்லெட் தயாரிக்கும் வகையில் ஆம்லெட் பவுடர் ஒன்றை தயாரித்துள்ளார். அந்த பவுடர் தயாரிக்கக்கூடிய இந்திரத்தையும் அவரே கண்டுபிடித்துள்ளார். இந்த ஆம்லெட் பொடிக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த பவுடரை தண்ணீரில் கலந்து சூடான பாத்திரத்தில் ஊற்றி உடனடியாக ஆம்லெட் தயாரிக்கலாம் என இன்ஜினீயரான அர்ஜுன் தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜூன் ஆம்லெட் பொடி தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். இதில், 5 வகையிலான ஆம்லெட் பொடி தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.