தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல பல நல்ல திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் இணைய குழந்தையின் பெற்றோரில் யாராவது ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும். இதன் மூலமாக பெண் குழந்தையின் பெயரில் ரூ.50,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும். குழந்தைகளுக்கு 18 வயது நிறைந்தவுடன் வைப்புத் தொகை, அதற்கான வட்டி அந்த பெண்ணுக்கு அளிக்கப்படும். வைப்பு தொகை இருப்பு வைக்கப்பட்ட 6வது ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.1800 அந்த பெண்ணிற்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.