தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. இதனால் அவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் உதவும் என்பதை காட்டும் விதமாக ஸ்ரீ பாக்கியலட்சுமி டிராவல்ஸ் நிறுவனம் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்களது ஆம்னி பேருந்துகளில் 50% கட்டண சலுகை அளிக்கப்படும் என அதன் உரிமையாளர் மாறன் அறிவித்துள்ளார்.

இந்த சலுகையை பெற நேரடியாக சென்று தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை காட்டி மாற்றுத்திறனாளிகாள் பாதி விலையில் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். ஆன்லைனில் ஒரு மாதத்துக்குள் டிக்கெட் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.