டெல்லி, நொய்டா, லக்னோ, பாட்னா, கான்பூர், வாரணாசி, முசாபர்பூர் மற்றும் அர்ரா உள்ளிட்ட நகரங்களில் தக்காளி கிலோ ரூ 80க்கு  விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தக்காளி விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மானிய விலையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் தக்காளி மலிவு விலையில் விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.