ஆம்ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறது பாஜக என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்களை அளிக்குமாறு கெஜ்ரிவாலிடம் காவல்துறை கூறி இருந்தது. இந்த புகார் சம்பந்தமாக எந்த எவிடென்ஸும், ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த காவல்துறை வந்துள்ளது. முதல்வர் வீட்டு கதவு திறக்காததால் வெளியில் காத்திருக்க்கிறது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை.