தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துமாறு கோரிக்கைகளும், கண்டனங்களும் வலுத்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் 90 மில்லி கட்டிங் கொண்ட டெட்ரா பாக்கெட் மதுபானம் விரைவில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் புதிய புதிய வடிவங்களில் மதுபானங்களை அரசு அறிமுகம் செய்வதற்கு தற்போது கண்டனங்களும் விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், டாஸ்மாக் கடைகளில் கட்டிங் டெட்ரா பாக்கெட்டுகளில் கொண்டு வரப்பட உள்ளது.

இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு ,அது பற்றி எனக்கு தெரியாது. மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் கொள்கை. எனவே இதுகுறித்து கருத்து சொல்ல எதுவுமே இல்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து விரைந்து சென்றுள்ளார். மற்ற கேள்விக்கெல்லாம் நிதானமாக பதில் அளித்த இவர் டாஸ்மாக் பற்றி கேள்வி கேட்டதும் பதற்றம் அடைந்து நடுங்குவதற்கு என்ன காரணம் என்று இணையவாசிகள் குமுறி வருகிறார்கள்.