திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2 முதல் நிலை தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திறமை உள்ள வல்லுனர்களை வைத்து இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடைபெற உள்ளது. எனவே குரூப்-1, குரூப்_2 தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் நேரில் சென்று பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.