தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், டிடிவி தினகரன் வீட்டு காவல் நாயாக நாங்கள் இருந்தோம்.

இப்போது சீறும் சிங்கமாக மாறிவிட்டோம் என கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரனை கண்டு நாங்கள் பயந்தது உண்மைதான் என்றும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். அவரின் இந்த பேச்சு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.