மக்களவை மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 19 காலை 7 மணி முதல் ஜூன் ஒன்றாம் தேதி மாலை 6.30 மணி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தவும் முடிவுகளை வெளியிடவும் அனைத்து ஊடகங்களுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுவதால் ஒரு பகுதியில் வெளியாகும் கருத்துக்கணிப்பு தேர்தல் நடக்கும் மற்ற பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது